காதலனால் கற்பழிக்கப்பட்டு குழந்தை பெற்ற பிளஸ்-1 மாணவி டிஸ்சார்ஜ்!!

Read Time:2 Minute, 0 Second

8b8399e8-470d-4100-bbcb-0e041cac2278_S_secvpfகுமரி மாவட்டம் கொல்லங்கோடு பகுதியை சேர்ந்த பிளஸ்–1 மாணவியை அவரது காதலன் அஜீஸ் மற்றும் பால் வியாபாரி ஜோஸ் ஆகியோர் கற்பழித்ததாக குற்றம் சாட்டப்பட்டதை தொடர்ந்து குளச்சல் அனைத்து மகளிர் போலீசார் அவர்கள் 2 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

இந்த நிலையில் கற்பழிக்கப்பட்ட மாணவிக்கு ஆசாரி பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் குறை பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்தது. இதைத் தொடர்ந்து தாயும் குழந்தையும் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தனர்.

மேலும் அந்த மாணவியின் குழந்தைக்கு தந்தை யார்? என்பதை கண்டறிய கோர்ட்டு அனுமதி பெற்று டி.என்.ஏ. பரிசோதனைக்காக தாய் மற்றும் குழந்தையின் ரத்த மாதிரி எடுக்கப்பட்டு மதுரைக்கு அனுப்பப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் தலைமறைவாக உள்ள பால் வியாபாரி ஜோசை கைது செய்ய தனிப்படை போலீசார் தேடி வருகிறார்கள். வெளி நாட்டுக்கு தப்பி ஓடிய காதலன் அஜீசை இங்கு வரவழைக்கவும் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

இதற்கிடையில் ஆசாரி பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த பிளஸ்–1 மாணவி மற்றும் அவரது குழந்தையின் உடல் நலன் தேறியது. இதைத் தொடர்ந்து தாயும் குழந்தையும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். அந்த மாணவியின் தாய் அவர்கள் 2 பேரையும் வீட்டிற்கு அழைத்து சென்றார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ராணுவ வீரர் மனைவி தீக்குளித்து தற்கொலை: உதவி கலெக்டர் விசாரணை!!
Next post எம்.ஜி.ஆர்-க்கு வந்த கோபம்…!!