ராணுவ வீரர் மனைவி தீக்குளித்து தற்கொலை: உதவி கலெக்டர் விசாரணை!!
பனப்பாக்கத்தை அடுத்த காட்டுப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது 26). ராணுவ வீரர். இவருக்கும் ஈஸ்வரி (20) என்ற பெண்ணுக்கும் 2 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.
இவர்களுக்கு 11 மாதத்தில் யுவனேஷ் என்ற ஆண் குழந்தை உள்ளது. கிருஷ்ணன் 2 மாத விடுமுறையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்துள்ளார்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் காலை ஈஸ்வரி தனக்கு தானே மண்எண்ணை ஊற்றி தீ வைத்து கொண்டதாக தெரிகிறது.
தீ மளமளவென்று உடல் முழுவதும் பரவியது. இதனால் வலி தாங்க முடியாமல் அய்யோ… அம்மா என்று அலறினார். அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து, அவரை மீட்டு சிகிச்சைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ஈஸ்வரி பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து பாணாவரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அருள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். மேலும் ஈஸ்வரிக்கு திருமணமாகி 2 ஆண்டுகள் ஆவதால் ராணிப்பேட்டை உதவி கலெக்டர் பிரியதர்ஷினி மேல் விசாரணை நடத்தி வருகிறார்.
Average Rating