திருவனந்தபுரம் அருகே 13 வயது சிறுமி கற்பழிப்பு: பக்கத்து வீட்டுக்காரர் கைது!!
திருவனந்தபுரம் அருகே உள்ள காட்டாக்கடை பகுதியை சேர்ந்தவர் சிவகுமார் (வயது 52). வெளிநாட்டில் வேலை செய்து வந்த இவர் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தான் ஊர் திரும்பினார்.
இவருக்கு மனைவியும், 2 பிள்ளைகளும் உள்ளனர். 2 பிள்ளைளுக்கும் திருமணமாகி தனியாக வசித்து வருகிறார்கள். சிவகுமாரின் பக்கத்து வீட்டில் வசிப்பவருக்கு 13 வயதில் ஒரு மகள் உள்ளார். மேலும் ஒரு மகனும் உள்ளார். அவர் வேலை விஷயமாக வெளியில் செல்லும்போது தனது மகளையும், மகனையும் சிவகுமார் வீட்டில் விட்டு செல்வது வழக்கம்.
கடந்த 29–ந் தேதி பக்கத்து வீட்டுக்காரரின் மகனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் தனது மகளை சிவகுமார் வீட்டில் விட்டு விட்டு மனைவி மற்றும் மகனை அழைத்து கொண்டு ஆஸ்பத்திரிக்கு சென்று விட்டார். அவர் வீடு திரும்பியபோது அவரது மகள் வீட்டில் அழுது கொண்டு இருந்தார்.
அவரிடம் விசாரித்தபோது உடல்நலம் சரியில்லை என்று மட்டும் கூறியுள்ளார். உடனே அவரை ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அழைத்து சென்றனர். அந்த சிறுமியை பரிசோதித்த டாக்டர் அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு இருப்பதை கண்டுபிடித்து பெற்றோரிடம் தெரிவித்தார். அவர்கள் அதிர்ச்சி அடைந்து மகளிடம் விசாரித்த போது பக்கத்து வீட்டுக்காரர் சிவகுமார் அந்த சிறுமியை கற்பழித்தது தெரிய வந்தது.
இதுபற்றி திருவனந்தபுரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. இதற்கிடையில் சிவகுமார் தலைமறைவாகி விட்டார். போலீசார் தீவிர விசாரணை நடத்தி எர்ணாகுளம் அருகே கோவிந்தமங்களம் பகுதியில் பதுங்கி இருந்த சிவகுமாரை கைது செய்தனர்.
பாதிக்கப்பட்ட சிறுமிக்கு திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Average Rating