சம்பளம் தராமல் இழுத்தடிப்பு: வேலைக்கார சிறுமிக்கு ரூ. 60 ஆயிரம் நஷ்டஈடு!!
Read Time:59 Second
டெல்லியில் உள்ள ஒரு பிரமுகர் வீட்டில் ஒரு ஏழைச்சிறுமி தங்கி வீட்டு வேலைகள் செய்து வந்தார். கடந்த 6 மாதங்களாக அந்த சிறுமிக்கு சம்பளம் வழங்காமல் வேலையில் இருந்து நிறுத்தி விட்டார்.
இதனால் சிறுமியின் குடும்பம் பாதிக்கப்பட்டது. இதை அறிந்த குழந்தைகள் நல அமைப்பு சிறுமிக்கு சம்பளம் பெற்றுத்தர போராடியது.
சிறுமியை வேலைக்கு அமர்த்தியது குற்றம் என்பதுடன் சம்பளமும் தராமல் இழுத்தடித்தால் டெல்லி கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அங்கு குழந்தைகள் நல கமிட்டி விசாரித்து சிறுமிக்கு அவரது முதலாளி ரூ. 60 ஆயிரத்து 840 நஷ்ட ஈடு வழங்க உத்தரவிட்டது.
Average Rating