மனைவியுடன் விவாகரத்து: பெற்ற மகன்களை கொன்ற தந்தை தானும் தற்கொலை!!

Read Time:2 Minute, 50 Second

03c02077-d9d0-49dd-8748-53d5379f2875_S_secvpfஐதராபாத்தில் நடைபெற்ற கொடூரமான சம்பவம் அம்மாநிலத்தில் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பெற்ற மகன்களை அவர்களது தந்தையே கொன்று தானும் ரெயிலில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார்.

ஐதராபாத் அருகே உள்ள அல்வால் பகுதியில் வசித்து வருபவர் 44 வயதான ராகவேந்திர குருபிரசாத். அவரது மனைவி சுகாசினியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இருவருக்கும் விவாகரத்து வழங்கப்பட்டது. அப்போது அவர்கள்து இரு மகன்களான விட்டல் மற்றும் நந்தா ஆகியோர் தாயின் கட்டுப்பாட்டில் இருக்கவேண்டும் என்றும் பிரதி வாரம் சனிக்கிழமை காலை மகன்களை தந்தை அழைத்து சென்று மாலையில் மீண்டும் தாயிடம் ஒப்படைக்கவேண்டும் என கோர்ட்டு தீர்ப்பளித்திருந்தது.

அதன்படி கடந்த சனிக்கிழமை மகன்களை அழைத்து சென்ற குருபிரசாத் மாலையில் அவர்களை மீண்டும் அழைத்து வந்து சுகாசினியிடம் ஒப்படைக்கவில்லை. இதனையடுத்து குருபிரசாத்தின் செல்போனுக்கு சுகாசினி அழைத்தபோது அவரது அழைப்பை எடுத்த காவல்துறையினர் குருபிரசாத் ரெயிலில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறினர். எனினும் அவர்களது 10 வயதிற்குட்பட்ட மகன்கள் பற்றி ஏதும் தெரியவில்லை என்று போலீசார் கூறினர். அல்வாரில் உள்ள இல்லத்திற்கு சென்று போலீசார் சோதனை செய்த போது, குருபிரசாத் எழுதிய தற்கொலை பற்றிய கடிதம் மட்டும் கிடைத்தது. அதிலும் மகன்கள் விட்டல் மற்றும் நந்தா பற்றி அவர் எதுவும் குறிப்பிடவில்லை.

இந்நிலையில் மேட்சல் அருகே குருபிரசாத்துக்கு சொந்தமான மனை ஒன்றில் இரு சிறுவர்களும் பிதைக்கப்பட்டிருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். அவர்கள் இருவரும் கொலை செய்யப்பட்டிருப்பதையும் போலீசார் கண்டறிந்தனர். பெற்ற மகன்களை தந்தையே கொலை செய்திருப்பது அப்பகுதியில் வசிப்பவர்களை மிகுந்த அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 2 லட்சம் கோடி செலவில் கழிவறைகள்!!
Next post ஷேக் ஹசீனாவை கொல்ல தீவிரவாதிகள் சதி!!