பொலிஸார் மீது தாக்குதல்: தாய், மகள் கைது, மகன் தப்பியோட்டம்!!

Read Time:2 Minute, 5 Second

573064208Untitled-1சட்டவிரோத மதுபான விற்பனை தொடர்பில் சுற்றிவளைப்பை மேற்கொள்ளச் சென்ற புத்தளம் குற்றத் தடுப்புப் பிரிவினர் மீது மதுரங்குளி – ஜயசிறிகம பிரதேசத்தில் வைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இன்று காலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில், ஒருவருக்கு சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளதோடு, மற்றொரு கான்ஸ்டபில் முந்தல் வைத்தியசாலையில் அனுமதிப்பட்டு பின்னர் புத்தளம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

புத்தளம் குற்றத் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் இன்று காலை மதுரங்குளி – ஜயசிரிகம பிரதேசத்தில் சட்டவிரோத மதுபான வியாபாரத்தை சுற்றிவளைக்கச் சென்றனர்.

இதன்போது மதுபான விற்பனையில் ஈடுபட்ட பெண்ணின் மகள் புத்தளம் குற்றத் தடுப்புப் பிரிவு பொறுப்பதிகாரியின் கையை வெட்டி காயப்படுத்தியுள்ளார்.

மேலும் அங்கு வந்த மற்றொருவர் பொலிஸ் கான்ஸ்டபில் ஒருவரை தனது மோட்டார் சைக்கிளில் மோதி விட்டு தப்பிச் சென்றுள்ளார்.

இவர் மதுபான தயாரிப்பில் ஈடுபட்ட பெண்ணின் மகன் என பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.

மேலும் சம்பவத்துடன் தொடர்புடைய தாயும் மகளும் கைதுசெய்யப்பட்டு, முந்தல் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

தப்பியோடிய சந்தேகநபர் இதுவரை கைதுசெய்யப்படவில்லை என்பதோடு, சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை முந்தல் பொலிஸ் மேற்கொண்டு வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மீனவர்களை விடுவிக்கும்படி தமிழக முதல்வர் கடிதம்!!
Next post இரு பொலிஸ் அதிகாரிகளுக்கு சிறை!!