இரு பொலிஸ் அதிகாரிகளுக்கு சிறை!!
கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரை மனிதாபிமானமற்ற முறையில் சித்திரவதை செய்த சம்பவம் தொடர்பில் இரு பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த இரு பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும் நான்கு வருடங்கள் சிறைத்தண்டனை விதித்து, பதுளை மேல் நீதிமன்ற நீதிபதி நேற்று உத்தரவு பிறப்பித்தார்.
2003ம் ஆண்டு மஹியங்கனை – பஹரகம்மன பிரதேசத்தில் கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட இரு சந்தேகநபர்கள், குறித்த பொலிஸ் உத்தியோகத்தர்களால் தாக்கப்பட்டுள்ளனர்.
இதன்போது சம்பந்தப்பட்ட இரு பொலிஸாரும் மஹியங்களை பொலிஸ் பிரிவில் கடமையாற்றி வந்துள்ளனர்.
தற்போது தண்டனை விதிக்கப்பட்டவர்களில் ஒருவர் அம்பாறை பொலிஸ் குற்றத் தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரியாகவும், மற்றொருவர் மோட்டார் வாகனப் பிரிவின் பொறுப்பதிகாரியாகவும் கடமையாற்றியமை குறிப்பிடத்தக்கது.
Average Rating