விபச்சாரத்தில் தள்ளிய பொலிஸை 12 வருடங்களுக்கு பின் கொன்ற பெண்!!

Read Time:4 Minute, 46 Second

91026045womanமகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் தன்னை விபச்சாரத்தில் தள்ளிய பொலிஸ்காரரை பெண் ஒருவர் கழுத்தை நெறித்து கொன்றுள்ளார்.

பீகாரை சேர்ந்த அப்பெண் கடந்த 2002 ஆம் ஆண்டு தனது 17 வயதில் சித்தி கொடுமை தாங்காமல் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். அங்கிருந்து மும்பை வந்த அவர் அங்குள்ள சத்ரபதி சிவாஜி ரெயில் நிலையத்தில் போகும் இடம் தெரியாமல் சுற்றிக்கொண்டிருந்த போது பொலிஸ்காரர் ஒருவர் அப்பெண்ணை அணுகியுள்ளார்.

தான் அவருக்கு தங்க இடம் ஏற்பாடு செய்து தருவதாக கூறி ஏமாற்றிய அவர், விபச்சார கும்பலிடம் அப்பெண்ணை 25000 ரூபாய்க்கு விற்றுவிட்டார். இதனால் அப்பெண் விபச்சாரம் என்ற படுகுழியில் தள்ளப்பட்டார். சில ஆண்டுகளுக்கு பின் விபச்சார குழுவின் முதலாளி ஏமாந்திருந்த சமயத்தில் அப்பெண் அங்கிருந்து தப்பினார். அதன் பின் பாந்த்ராவில் உள்ள குடிசைப்பகுதிக்கு வந்த அங்குள்ள ஒரு வீட்டில் தங்கி விபச்சாரத்தில் ஈடுபடாமல் தனியார் தொழிற்சாலை ஒன்றில் வேலை செய்து வந்தார்.

அச்சமயத்தில் உடன் வேலை செய்யும் இளைஞர் ஒருவரை அப்பெண் திருமணம் செய்துகொண்டார். இருவரின் குடும்ப வாழ்க்கையில் அவர்களுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. அக்குழந்தை பிறந்த சில மாதத்தில், அப்பெண்ணின் கணவன் அவளை பிரிந்து சென்று விட்டான். தனித்து நின்ற போதே துன்பத்தில் தவித்த அப்பெண்ணிற்கு மீண்டும் வறுமை என்ற துன்பம் வாட்டியது. இதனால் மீண்டும் விபச்சாரப் பாதைக்கு அப்பெண் திரும்ப, ஒரு முறை அவர் போலீசாரால் சுற்றிவளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டார்.

அப்போது தான் தன்னை 2002 ஆம் ஆண்டு விபச்சாரத்தில் தள்ளிய போலீஸ்காரர், போலீஸ் குழுவில் இருந்ததை கண்டார். பொலிஸ்காரரும் தான் விபச்சாரத்தில் தள்ளிய பெண் தான் அவர் என்பதை தெரிந்துகொண்டார். உடனடியாக அவரது செல்போன் எண்ணையும், எங்கே தங்கியுள்ளார் என்பதையும் அறிந்து கொண்ட பொலிஸ்காரர் அவளது குடிசைக்கு தொடர்ந்து வந்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

அவருக்கு ஆசைக்கு இணங்கவில்லை என்றால் விபச்சார வழக்கில் கைது செய்து விடுவேன் என்றும் மிரட்டியுள்ளார். இதனால் கோபத்தின் உச்சிக்கு சென்ற அப்பெண், விபச்சாரத்தில் தள்ளி தன் வாழ்க்கையையே பாழாக்கிய பொலிஸ்காரரை கொல்ல முடிவெடுத்தார்.

கடந்த செப்டம்பர் 12-ந் திகதி பொலிஸ்காரரை தனது குடிசைக்கு வரவழைத்த அவர், அவருக்கு மது ஊற்றி கொடுத்துள்ளார். போதையின் உச்சிக்கு சென்ற பொலிஸ்காரர் மயங்கிய நிலையில் இருந்தபோது அவரது கழுத்தை நெறித்து கொன்ற அப்பெண் பின்னர் தனது பெண் நண்பரின் வீட்டுக்கு சென்றுவிட்டார். பொலிஸ்காரர் தன்னை விபச்சாரத்தில் தள்ளியது பற்றி மீண்டும் மீண்டும் நினைத்த அப்பெண், தனது குடிசைக்கு திரும்பி மற்ற பொலிஸ்காரர்களுக்கும் எச்சரிக்கும் விதத்தில், கொல்லப்பட்ட பொலிஸ்காரரின் உடலை பாயில் சுற்றி நெருப்பு வைத்தார். அதன் பின் தான் செய்த கொலையை வெளியுலகிற்கு தெரியவைத்தார். விரைந்து வந்த பொலிசார் அப்பெண்ணை கைது செய்து சிறையிலடைத்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஈரோட்டில் பெண் போலீஸ் விஷம் குடித்து தற்கொலை முயற்சி!!
Next post அந்த சம்பவம் இன்னும் என்னை வாட்டி வதைக்கிறது…!!