நீண்ட நாள் ஆசை நிறைவேறியதாம்..!!
Read Time:1 Minute, 15 Second
முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு’ படத்தின் மூலம் தமிழ்சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை பூர்ணா. அதைத்தொடர்ந்து ‘ஜன்னலரோம்’, ‘தகராறு’, ‘வித்தகன்’ ஆகிய படங்களில் நடித்து பிரபலமானார்.
நடனத்தில்மிகுந்த ஆர்வம் கொண்ட பூர்ணா தற்போது நடனப்பள்ளி ஒன்றைதொடங்கவிருக்கிறாராம். பூர்ணா ஒரு சிறந்த பரதநாட்டிய கலைஞர். இவருக்குநீண்ட நாளாக பரதநாட்டியம் கற்றுக் கொடுக்கும் பள்ளி ஒன்றை தொடங்க ஆசையாம்.
இவருடையஇந்த ஆசையை அவரது அப்பாவிடம் கூற, அவரோ சொந்த ஊரான கேரளா மாநிலம்கன்னூரில் பூர்ணாவுக்கு நடனப் பள்ளி ஒன்றை தொடங்க முடிவு செய்துள்ளார்.இன்னும் இரண்டு மாதங்களில் இந்த நடனப்பள்ளி தொடங்கும் எனஎதிர்பார்க்கப்படுகிறது.
பூர்ணா தற்போது ராகாவா என்ற புதுமுக இயக்குனர் இயக்கும் புதிய படமொன்றில் நடித்து வருகிறார்.
Average Rating