அந்த சம்பவம் இன்னும் என்னை வாட்டி வதைக்கிறது…!!
சமீபத்தில் டெல்லியில் மிருக காட்சி சாலையை சுற்றி பார்த்த இளைஞன், புலிஅடைக்கப்பட்டு இருந்த பகுதியில் தவறி விழுந்தான். புலி அந்த இளைஞனை கடித்துஇழுத்து போய் கொடூரமாக கொன்றது. இந்த சம்பவம் நாடு முழுவதும்அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது. புலியை கொன்று விடும்படிடுவிட்டர், பேஸ்புக்கில் பலர் கருத்துக்கள் பதிவு செய்தார்கள். நடிகைதிரிஷா உள்ளிட்ட பலர் புலியை கொல்ல வேண்டாம் என்று கோரிக்கை விடுத்தனர்.
இந்த நிலையில் இந்த துயர சம்பவம் குறித்து ஹன்சிகா பேஸ்புக்கில் கருத்து தெரிவித்து உள்ளார். அவர் கூறியதாவது:–
டெல்லி மிருக காட்சி சாலையில் நடந்த சம்பவம் அதிர்ச்சி அளிப்பதாக இருந்தது.வனவிலங்குகள் ஆபத்தானவை. இந்த விஷயத்தை எல்லோரும் புரிந்து கொள்ளவேண்டும்.
காடுகளில் நிறைய சினிமா படப்பிடிப்புகள் நடக்கின்றன. அடர்ந்த காட்டுபகுதிக்குள் படப்பிடிப்புக்காக சென்று வருகிறோம். அப்போது எங்கள்பாதுகாப்பில் மிகவும் கவனமாக இருப்போம்.
அதுபோல் டெல்லி மிருககாட்சி அலுவலர்களும் எச்சரிக்கையாக இருந்து இருந்தால் இந்த துயர சம்பவத்தை தவிர்த்து இருக்கலாம்.
மிருக காட்சி சாலைக்கு நிறைய பார்வையாளர்கள் வருகிறார்கள். அவர்கள்பாதுகாப்புக்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். ஆபத்தான பகுதிகளில்போர்டு எழுதி வைக்கலாம். பார்வையாளர்களுக்கான வாயில் திறக்கப்படுவதற்குமுன்பு பாதுகாப்பு சரியாக உள்ளதா என்பதை அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும்.இவ்வாறு ஹன்சிகா கூறியுள்ளார்.
Average Rating