ஈரோட்டில் பெண் போலீஸ் விஷம் குடித்து தற்கொலை முயற்சி!!
மொடக்குறிச்சி வ.உ.சி. வீதியை சேர்ந்தவர் ரேவதி (வயது 24). இவர் ஈரோடு ஆனைக்கல் பாளையத்தில் ஆயுத படை பிரிவில் பெண் காவலராக பணிபுரிந்து வருகிறார்.
கடந்த 3 நாட்களாக விடுமுறை எடுத்து கொண்டு வீட்டில் ரேவதி இருந்து வந்தார்.
இந்த நிலையில் இன்று காலை வீட்டில் இருந்து ரேவதி, வழக்கம் போல் வேலைக்கு புறப்பட்டார்.
அப்போது முள்ளாம் பரப்பு என்ற இடத்தில் அவர் வந்த போது திடீரென மயங்கி கீழே விழுந்தார். இதை கண்டு அந்த வழியாக சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
உடனே அவரை மீட்டு ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், ரேவதி விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்திருந்தது தெரிய வந்தது.
இதைதொடர்ந்து ஆஸ்பத்திரியில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பெண் போலீஸ் ரேவதி எதனால் விஷம் குடித்தார்? என்பது பற்றி ஈரோடு தாலுகா போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
Average Rating