பேராதனை பல்கலை மாணவர்கள் கண்டியில் சத்தியாக்கிரகம்!!
Read Time:1 Minute, 23 Second
பேராதனை பல்கலைக்கழக முகாமைத்துவ பீட மாணவர்கள் சிலர் இன்று (09) காலை கண்டி ஜோர்ஜ் ஆர் டி சில்வா பூங்காவிற்கு அருகில் சத்தியாக்கிரகம் ஒன்றை ஆரம்பித்துள்ளனர்.
பல்கலைக்கழகத்தில் முகாமைத்துவ பீடத்தை ஏற்படுத்துமாறு கோரி கலஹா சந்தியில் சத்தியாக்கிரகம் ஆரம்பித்து 50 நாட்கள் கடந்தும் இது தொடர்பில் அதிகாரிகள் கவனம் செலுத்தவில்லை என்றும் அதனால் இந்த சத்தியாக்கிரகத்தை ஆரம்பித்துள்ளதாகவும் மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
7 வருடங்களாக இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டு வருவதாகவும் உரிய அதிகாரிகள் இன்னும் இதற்கு தீர்வு வழங்கவில்லை என்றும் பேராதனை பல்கலைக்கழக முகாமைத்துவ பீட மாணவர் செயற்பாட்டு சபை தலைவர் துமிது நுகுலசூரிய தெரிவித்தார்.
சத்தியாக்கிரகம் இருக்கும் மாணவர்கள் முகாமைத்துவ பீடம் வேண்டி கையெழுத்து பெறும் நடவடிக்கையிலும் ஈடுபட்டுள்ளனர்.
Average Rating