வன ஜீவராசிகள் காவல் உத்தியோகத்தர்கள் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட முடிவு!!
Read Time:51 Second
சம்பள பிரச்சினை உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து தொழிற்சங்க நடவடிக்கை ஒன்றை முன்னெடுக்க அகில இலங்கை வன ஜீவராசிகள் காவல் உத்தியோகத்தர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.
நாளை மாலை தொடக்கம் தமது இந்த பணிப்பகிஸ்கரிப்பு தொடரும் என சங்கத்தின் தலைவர் பிரபாத் கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
சம்பள பிரச்சினையை முன்வைத்து ரயில் தொழிற்சங்கள் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டு வரும் நிலையில் வன ஜீவராசிகள் காவலர்கள் தமது பணிப்பகிஸ்கரிப்பு அறிவித்தலை விடுத்துள்ளனர்.
Average Rating