ஸ்னேகா பற்றி FACEBOOK இல் சேரன் எழுதியவை…!!
விஜய், சமந்தா ஜோடியாக நடிக்கும் ‘கத்தி’ படம் தீபாவளிக்கு ரிலீசாகிறது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ளார். லைகா நிறுவனம் சார்பில் சுபாஷ்கரன் தயாரித்துள்ளார்.
லைகா நிறுவனத்தை இலங்கை அரசுடன் தொடர்படுத்தி எதிர்ப்புகள் கிளம்பின. போராட்டங்களும் நடந்தது. இலங்கை ஜனாதிபதியுடன் எந்த தொடர்பும் இல்லை என்று தயாரிப்பு தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது.
இதே தயாரிப்பு நிறுவனம் ஏற்கனவே ஞானம் பிலிம்ஸ் என்ற பெயரில் சேரன், சினேகா நடித்த ‘பிரிவோம் சந்திப்போம்’ படத்தையும் எடுத்து வெளியிட்டது. எனவே அந்த படத்தில் நடித்ததற்காக சேரனையும் சினேகாவையும் கடுமையாக திட்டி பேஸ்புக்கில் கருத்துக்களை சிலர் பதிவு செய்து இருந்தனர். சேரன் பேஸ்புக்குக்கு சென்றும் கண்டித்தார்கள்.
இதற்கு சேரன் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறி இருப்பதாவது:எஈழத்துக்கு ஆதரவாகவும் லைக்காவுக்கு எதிராகவும் போராடுகிற தம்பிகள் கவனத்திற்கு. தயவு செய்து உங்க பிரச்சினைக்கு நான் ஆள் இல்ல. எனக்கு உங்க பிரச்சினையை வச்சு பொழப்பு நடத்த தேவையும் இல்ல.
உங்களுக்கு யார் கூட பிரச்சினையோ அவங்களோட மோதுங்க. எனக்கு அரசியலுக்கு வர்ற ஐடியாலாம் இல்ல. லைகா யாருன்னே தெரியாத காலத்துல அவங்க படத்துல நடிச்சது அதுவும் கரு.பழனிப்பனுக்காக. எனவே என்னோட பேஸ்புக் வால்ல இனிமே உங்க கருத்துக்களை பதிவு பண்ணாதீங்க.
ஒரு தடவை சொன்னா புரியும்னு நினைக்கிறேன். இதற்கு மேலும் என் வம்புக்கு வரமாட்டீங்கன்னு நம்புறேன். சினேகாவை பற்றி எழுதும் போது அவங்க உருவத்துல உங்க தங்கையை நினைச்சு பாருங்க. எழுத முடியுமான்னு பார்ப்போம். பெண்களை தாய்போல பார்த்த பிரபாகரன் தம்பிகளா நீங்கள். டவுட்தான். கெடுக்க வேண்டாம் உயிர் சிந்தி வளர்த்த இயக்கத்தின் நற்பெயரை. இவ்வாறு சேரன் தனது பேஸ்புக்கில் எழுதி உள்ளார்.
Average Rating