குழந்தைகளை கழுத்தறுத்துக் கொன்று தானும் தற்கொலை செய்த தாய்!!
Read Time:1 Minute, 5 Second
குஜராத் மாநிலம், சூரத் மாவட்டத்தில் பெற்ற தாயே 2 குழந்தைகளின் கழுத்தை அறுத்துக் கொன்றுவிட்டு, 9-வது மாடியில் இருந்து குதித்து தானும் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சூரத் மாவட்டத்தின் உதான் பகுதியில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பில் வசித்து வந்த பாவ்னா பட்டேல்(30) நேற்று தனது மகள் த்ருப்பா(10), மகன் ஓம்(5) ஆகிய இருவரையும் கழுத்தை அறுத்துக் கொன்று விட்டு, 9-வது மாடியில் இருந்து தற்கொலை செய்துக் கொண்டதாக தெரிவித்துள்ள பொலிசார், இந்த துயர முடிவுக்கான காரணம் என்ன? என்பது தொடர்பாக அப்பகுதியில் வசிப்பவர்களிடம் விசாரித்து வருகின்றனர்.
Average Rating