மதுரையில் வங்கி பெண் ஊழியர் உள்பட 2 பேர் மாயம்!!
மதுரை எஸ்.ஆலங்குளத்தைச் சேர்ந்தவர் ராஜ். இவரது மகள் நிருணாதேவி (வயது23). இவர் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே உள்ள ஒரு வங்கியில் பணிபுரிந்து வந்தார்.
சம்பவத்தன்று வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற நிருணாதேவி பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து ராஜ் கொடுத்த புகாரின்பேரில் கூடல்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து நிருணாதேவியை தேடி வருகின்றனர்.
தேனி–ஆண்டிப்பட்டி ரோட்டில் உள்ள மெட்டுலூத்து கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மகள் பிருந்தா (19). மதுரையில் உள்ள ஒரு மகளிர் கல்லூரியில் 3–ம் ஆண்டு படித்து வருகிறார்.
சம்பவத்தன்று மதுரை கோசகுளத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு பிருந்தா சென்றார். பின்னர் அங்கிருந்து வீட்டுக்கு செல்வதாக கூறி விட்டு சென்ற அவர் வீட்டுக்கு வரவில்லை. எங்கு சென்றார் என தெரியவில்லை. பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.
இதுகுறித்த புகாரின் பேரில் ஊமச்சிகுளம் போலீசார் பிருந்தாவை தேடி வருகின்றனர்.
Average Rating