வேலூர் சிறுவன் சேலம் ரெயில் நிலையத்தில் மாயம்!!
Read Time:1 Minute, 6 Second
வேலூர் மாவட்டம் கம்மவான்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ஜெயச்சந்திரன். இவரது மகன் ஜெயக்குமார் (வயது 13). சம்பவத்தன்று தந்தையும், மகனும் திருப்பூர் செல்ல காட்பாடி ரெயில் நிலையத்தில் ரெயில் ஏறி வந்தனர்.
இந்த ரெயில் சேலம் ஜங்சன் ரெயில் நிலையம் வந்தபோது சிறுவன் ஜெயக்குமார் மாயமாகி விட்டான். இவனை ஜெயச்சந்திரன் தேடிபார்த்தார். எங்கும் அவன் இல்லை. பின்னர் இதுபற்றி அவர் சேலம் ஜங்சன் ரெயில் நிலைய போலீசில் புகார் செய்தார்.
இதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுவனை தேடி வருகிறார்கள். சிறுவனை பற்றி தகவல் தெரிந்தவர்கள் 0427– 2447404 அல்லது 94454 65907, 90801 05990 என்ற போன்களில் தெரிவிக்கலாம் என போலீசார் கேட்டு கொண்டுள்ளனர்.
Average Rating