பெரியகுளத்தில் குப்பை மேட்டில் வீசப்பட்ட 6 மாத பெண் சிசு!!
Read Time:1 Minute, 15 Second
பெரியகுளம் அருகில் உள்ள வடுகபட்டி வள்ளுவர் தெருவில் இன்று காலை குப்பையில் ஒரு சடலம் கிடந்தது. அதனை நாய்கள் இழுத்து சாப்பிட முயன்று கொண்டிருந்தன. இதை பார்த்ததும் சந்தேகமடைந்த அப்பகுதி பொதுமக்கள் அங்கு சென்றபோது குறைபிரசவத்தில் பிறந்த பெண் சிசு இறந்து கிடந்ததை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தனர்.
உடனே இதுகுறித்து தென்கரை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் செல்லப்பாண்டி தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து வந்தனர்.
அவர்கள் அந்த சிசுவின் உடலை கைப்பற்றி பெரியகுளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அந்த குழந்தை தவறான வழியில் பிறந்ததால் தூக்கி வீசப்பட்டதா? அல்லது குறைபிரசவத்தில் இறந்து பிறந்ததால் தூக்கி வீசப்பட்டதா? என்று அப்பகுதி பொதுமக்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Average Rating