ரயில் தொழிற்சங்க போராட்டம் தொடர்கிறது!!
Read Time:1 Minute, 13 Second
இலங்கையில் ரயில்வே பணியாளர்கள் நடத்தி வரும் தொழிற்சங்க போராட்டம் தொடர்பில் இடம்பெற்ற இணக்கப் பேச்சு தோல்வி கண்டுள்ளது.
நிதியமைச்சின் செயலாளருக்கும் தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கும் இடையில் நேற்று இடம்பெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து ரயில்வே துறையினரின் போராட்டம் இரண்டாம் நாள் இரவாகவும் தொடர்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ரெயில்வே தொழிற்சங்க கூட்டமைப்பினர் தமது அடிப்படை சம்பளம் 15 ஆயிரம் ரூபாவில் இருந்து 16 ஆயிரம் ரூபாவாக உயர்த்தப்பட வேண்டும் உட்பட்ட கோரிக்கைகளை முன்வைத்து நேற்று முன்தினம் இரவு முதல் இந்த போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
இதன் காரணமாக இலங்கையில் முழுமையாக ரயில் சேவைகள் ஸ்தம்பித்துள்ளன.
Average Rating