பாகிஸ்தான் ஹேக்கர்கள் அட்டூழியம்: இந்திய பிரஸ் கிளப்-ன் வெப்சைட் முடங்கியது!!

Read Time:1 Minute, 28 Second

4cc5693e-9dfd-4bba-a236-c66ecebc716d_S_secvpfபாகிஸ்தானை சேர்ந்த சைபர் ஹேக்கர்கள் இந்திய பத்திரிகையாளர்கள் சங்கத்தின் இணையதளத்தை ‘ஹேக்’ செய்து அதில் இந்தியாவிற்கு எதிரான வாசகங்களை பதிவேற்றம் செய்துள்ளனர்.

‘டீம் சைபர் வேரியர்ஸ்’ என்று அவர்களாகவே தங்களை அழைத்துக் கொள்ளும் இந்த ஹேக்கர்கள் பாகிஸ்தான் கொடியுடன் கூடிய லோகோவையும் போஸ்ட் செய்துள்ளனர். மேலும், இந்திய அரசின் பல இணையதளங்களையும் முடக்கி நாட்டின் இணையதள சேவையை முற்றிலும் முடக்குவோம் என்றும் மிரட்டல் விடுத்துள்ளனர்.

இதுபற்றி, இந்திய பத்திரிகையாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் நதீம் அஹமத் கஸ்மி கூறுகையில், ‘சென்ற வாரம் இதே போன்று ஹேக் செய்யப்பட்ட போது வேறெந்த வாசகங்களும் அதில் இடம்பெறவில்லை. ஆனால், இப்போது மறுபடியும் ஹேக் செய்யப்பட்ட போது இந்தியாவுக்கு எதிரான செய்திகள் அதில் இடம்பெற்றிருக்கிறது. இது சம்பந்தமாக போலீஸில் புகார் செய்திருக்கிறோம்.’ என்றார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பூ பறிக்கச் சென்ற மாணவன் குளத்தில் விழுந்து பலி!!
Next post ஸ்ருதி இல்ல… பிபாஷாபாசுக்கு லக்…!!