மாணவர்கள் மீதான தாக்குதல் தொடர்பில் விஷேட குழுவினர் விசாரணை!!
சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர்கள் மீதான தாக்குதல் தொடர்பில் விஷேட பொலிஸ் குழுவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர்கள் சத்தியாக்கிரகம் மேற்கொண்டுள்ள இடத்திற்கு சிலர் தீ வைத்துள்ளதோடு, குறித்த மாணவர்களை தாக்கி விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
நேற்று இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவ சங்கத்தின் அமைப்பாளர் ரசிந்து ஜெயசிங்க தெரிவித்துள்ளார்.
மேலும் தாக்குதல் காரணமாக 12 மாணவர்கள் மற்றும் இரு பிரதேசவாசிகள் காயமடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எதுஎவ்வாறு இருப்பினும் நேற்று இரவு 11.30 அளவில் இடம்பெற்ற இந்த தாக்குதலில் 10 மாணவர்கள் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவர்களில் நால்வர் சிகிச்சை பெற்று வௌியேறியுள்ளதாகவும், அறுவர் பலாங்கொடை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.
Average Rating