தாய் கொலை, மகள் படுகாயம்: கள்ளத் தொடர்பு காரணமா?
Read Time:59 Second
பாணதுறை பிரதேசத்தில் கூறிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
மொரட்டுவை – ஹோரேதுடுவ பகுதியைச் சேர்ந்த 45 வயதான ஒருவரே இவ்வாறு பலியாகியுள்ளார்.
தனது மகளோடு விஹாரைக்குச் சென்ற வேளையே இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
இதன்போது படுகாயமடைந்த மகள் பாணதுறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை குறித்த பெண்ணுடன் கள்ள உறவு பேணிவந்த நபரே இவ்வாறு அவரைக் கொலை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.
சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளதோடு, அவர் பாணதுறை – கோரகான பிரதேசத்தைச் சேர்ந்த 58 வயதான ஒருவராவார்.
Average Rating