திண்டுக்கல் அருகே அரசு தொகுப்பு வீடுகளில் உல்லாசம், கும்மாளம்!!

Read Time:2 Minute, 25 Second

a262fe93-3123-4de0-98e6-fe634e252080_S_secvpfதிண்டுக்கல் அருகே பயனாளிகள் பயன்படுத்தாத அரசு குடியிருப்பு வீடுகள் சமூக விரோதிகளின் கூடாரமாகவும், காமகளியாட்டங்களுக்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

திண்டுக்கல் அருகில் உள்ள செட்டிநாயக்கன்பட்டி பஞ்சாயத்து அலக்குவார் பட்டியில் இந்திரா நினைவு குடியிருப்பு திட்டத்தின் கீழ் கடந்த 2002–ம் ஆண்டுமுதல் 2006 வரை 25–க்கும் மேற்பட்ட வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு பயனாளிகளுக்கு ஒதுக்கப்பட்டன. ஒரு சில மாதங்கள் மட்டுமே இந்த வீடுகளில் வசித்த அவர்கள் பின்னர் வீட்டை காலி செய்து சென்றுவிட்டனர்.

பல மாதங்களாக பயன்பாடற்ற நிலையில் இருக்கும் இந்த வீடுகள் தற்போது சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது. மாலை நேரங்களில் மது குடிக்கும் இடமாகவும், இரவு நேரங்களில் பெண்களை அழைத்து உல்லாசம் அனுபவிக்கும் இடமாகவும் மாறி விட்டது.

இதுமட்டுமின்றி இந்த வீடுகளில் இருந்த கதவு, ஜன்னல் போன்ற மர சாமான்களை வெட்டி எடுத்துச்சென்றுவிட்டனர். குடியிருக்க வீடுகள் இன்றி எத்தனையோ பேர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தபடி உள்ளனர். மேலும் ஒவ்வொரு வருடமும் வீடில்லாதவர்களுக்கு அரசு மானிய உதவிகள் வழங்கி வீடுகள் கட்டி கொடுக்கிறது.

இருந்தபோதும் பயனாளிகளின் உண்மையான நிலை தெரியாமல் வீடுகள் ஒதுக்கப்படுவதால் இதுபோன்ற அலட்சியம் காட்டி வருகின்றனர். பராமரிப்பின்றி உள்ள இந்த வீடுகளை சீரமைத்து மற்றவர்களுக்கு ஒதுக்கினால் கூட அவர்கள் பயன்அடைவார்கள். எனவே மாவட்ட நிர்வாகம் பாழடைந்த இந்த வீடுகளை புணரமைத்து வேறு பயனாளிகளுக்கு வழங்க முன்வரவேண்டும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மீண்டும் பொலிஸ் காவலில் விசாரணை ஏன்?
Next post அருப்புக்கோட்டையில் திருமணம் செய்வதாக கூறி பெண் பாலியல் பலாத்காரம்!!