தெலுங்குதேச தொண்டர்களுடன் மோதல்: நடிகை ரோஜாவை தாக்க முயற்சி!!
நடிகை ரோஜா ஆந்திர மாநிலம் நகரி தொகுதி எம்.எல்.ஏ.வாகவும் உள்ளார். நகரி தொகுதிக்குட்பட்ட மேலப்பட்டு கிராமத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. இதில் தொகுதி எம்.எல்.ஏ. என்ற முறையில் நடிகை ரோஜா கலந்து கொண்டார்.
மேடையில் நகரி தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. முத்து கிருஷ்ண நாயுடு படத்துடன் கூடிய பேனர்களை தெலுங்கு தேசம் கட்சியினர் வைத்து இருந்தனர். அதோடு அவரது கையால் நலத்திட்ட உதவி வழங்கவும் ஏற்பாடு செய்து இருந்தனர்.
இதற்கு ஒஸ்.எஸ்.ஆர். காங்கிரஸ் தொண்டர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் ரோஜா கூட்டத்துக்கு வந்தார்.
அவர் பேசும் போது, முன்னாள் முதல்–மந்திரி ராஜசேகர ரெட்டி கொண்டு வந்த திட்டங்களை நினைவுபடுத்தினார். ரோஜாவின் இந்த பேச்சுக்கு தெலுங்குதேச தொண்டர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
‘‘இப்போதைய முதல்வரின் திட்டங்களை மட்டுமே பேச வேண்டும்’’ என்று கூறினர். அவர்களுடன் நடிகை ரோஜா வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
‘‘மரபுபடி தொகுதி எம்.எல்.ஏ.தான் நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும். ஆனால் நீங்கள் என்னிடம் தோற்று போன ஒருவரை வைத்து நலத்திட்ட உதவிகள் வழங்குவது மட்டும் என்ன நியாயம்’’ என்று பதிலடி கொடுத்தார்.
இதனால் இருதரப்பினர் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அடிதடி மோதல் ஏற்படும் சூழல் உருவானது.
ஒரு கட்டத்தில் நடிகை ரோஜாவை தாக்க தெலுங்கு தேச தொண்டர்கள் தடியுடன் பாய்ந்து வந்தனர்.
உடனே போலீசார் தலையிட்டு இருதரப்பினரையும் சமரசப்படுத்தினர். அதன்பிறகு அமைதியாக கூட்டம் நடந்தது.
Average Rating