மனைவியின் புகாரில் இருந்து கணவனை காப்பாற்ற ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய போலீஸ்காரர் கைது!!

Read Time:1 Minute, 33 Second

29ac642e-6e1c-46bd-8ce8-1e1d8ae1b933_S_secvpfமராட்டிய மாநிலம், பன்வேல் தாசில் சுகாப்பூரைச் சேர்ந்த ஒரு தம்பதியர் இடையே சில தினங்களுக்கு முன்னர் குடும்பத் தகராறு ஏற்பட்டது.

பாதிக்கப்பட்ட மனைவி கணவரின் மீது நவி மும்பை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரை விசாரித்த போலீஸ்காரரான பத்மாகர் நாகா பட்டில், ’இவ்வழக்கில் உங்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க 15 ஆயிரம் ரூபாய் தந்தால் உங்களை விடுவிக்கிறேன்.

இல்லையென்றால், கம்பித்தான்.., களித்தான்’ என்று கணவரை மிரட்டியுள்ளார். அவ்வளவு பணம் தர முடியாது. வேண்டும் என்றால் 10 ஆயிரம் ரூபாய் தருகிறேன். இந்த வழக்கை முடித்து வையுங்கள் என்று அவரிடம் கூறிய கணவர், இது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் முறையிட்டார்.

அவர்கள் வகுத்து தந்த திட்டத்தின்படி, லஞ்சம் தருபவரின் வீட்டுக்கு பத்மாகர் நாகா பட்டில் வரவழைக்கப்பட்டார். 10 ஆயிரம் ரூபாயை அவர் வாங்கிக் கொண்டபோது, அந்த வீட்டினுள் மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் அவரை கைது செய்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தாய் கொலை, மகள் படுகாயம்: கள்ளத் தொடர்பு காரணமா?
Next post இள வயது இயக்குனருடன் காதலா? நடிகை கடுப்பு!!