குளியலறையில் பெண்கள் குளிப்பதை செல்போனில் படம் பிடித்த ஆசாமி: போலீசார் விசாரணை!!
மும்பை பைகுல்லா மேற்கு பகுதியில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடத்தின் 4–வது மாடியில் பொது குளியலறை உள்ளது. கடந்த 8–ந் தேதி அன்று அந்த கட்டிடத்தில் வேலை செய்து வரும் இளம்பெண் ஒருவர் அங்கு குளிப்பதற்காக சென்றார்.
அப்போது குளியலறை ஜன்னலில் ஒரு செல்போன் இருந்ததை கண்டார். அந்த செல்போனை தனக்கு முன் குளித்த யாரோ மறதியாக விட்டு சென்றுள்ளனர் என்று கருதினார்.
பின்னர் குளித்து கொண்டிருந்த போது அந்த பெண்ணுக்கு திடீரென சந்தேகம் எழுந்தது. உடனே செல்போனை எடுத்து பார்த்தார். அப்போது அந்த செல்போனில் வீடியோ ஆன் செய்து வைக்கப்பட்டிருந்தது.
அவர் குளித்துக் கொண்டிருந்த காட்சி அதில் பதிவாகி இருந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெண் உடனே தான் வேலை செய்யும் வீட்டு உரிமையாளரிடம் செல்போனை கொடுத்து சம்பவத்தை கூறினார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த வீட்டு உரிமையாளர் அக்ரிபாடா போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். மேலும் அந்த செல்போனையும் கொடுத்தார்.
போலீசார் அந்த செல்போனை வாங்கி சோதனை செய்தனர். ஆனால் அந்த செல்போனில் சிம் கார்டு ஏதும் இல்லை. மேலும் அது புதிதாக வாங்கப்பட்ட செல்போன் என்பதும் தெரியவந்தது. யாரோ ஆசாமி பெண்கள் குளிப்பதை படம் பிடிப்பதற்காகவே அந்த செல்போனை வாங்கி குளியலறை ஜன்னலில் வைத்திருந்தது தெரியவந்தது. அந்த கட்டிடத்தை சேர்ந்த ஒருவர் தான் இதை செய்திருக்க வேண்டும் என்று போலீசார் கருதுகின்றனர். சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்மந்தப்பட்ட ஆசாமியை கண்டுபிடிக்க தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Average Rating