டியூசனுக்கு சென்ற மாணவியிடம் சில்மிஷம்: வாலிபர் கைது!!
Read Time:58 Second
பண்ருட்டி அருகே உள்ள கனிசபாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் லதா (வயது 15, பெயர் மாற்றப்பட்டுள்ளது) இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 10–ம் வகுப்பு படித்து வந்தார். இவர் அங்குள்ள டியூசன் சென்டரில் டியூசன் படித்துவிட்டு இரவில் வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது அவரிடம் அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஜெயவேல் சில்மிஷம் செய்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து புதுப்பேட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது. சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். இதுதொடர்பாக ஜெயவேலை போலீசார் கைது செய்தனர்.
Average Rating