வைகோ உள்ளிட்ட 9 பேர் மீதான வழக்கு இரத்து!!
வைகோ உள்ளிட்ட ஒன்பது பேர் மீது தொடரப்பட்ட பொடா வழக்கு இரத்துச் செய்யப்பட்டுள்ளது.
பொடா வழக்கை திரும்பப் பெற முடியாது என்ற பொடா நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவே இவ்வாறு இரத்து செய்யப்படுவதாக, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருமங்கலத்தில் 2002ல் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பேசியதாக ஒன்பது பேர் மீது வழக்குப் போடப்பட்டது.
இவ்வாறு குற்றஞ்சாட்டப்பட்டவர்களில் வீர இளவரசன், பி.எஸ்.மணியம் ஆகியோர் உயிரிழந்தனர்.
2004ல் பொடா வழக்கை திரும்பப் பெறுவதாக அரசு தரப்பு தெரிவித்தும் நீதிமன்றம் ஏற்க மறுத்துவிட்டது. பொடா நீதிமன்ற உத்தரவை எதிர்த்து வைகோ உள்பட 7 பேர் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தனர்.
இந்த மனுவை விசாரித்தத சென்னை உயர் நீதிமன்றம் வைகோ உள்ளிட்ட 9 பேர் மீது தொடரப்பட்ட பொடா வழக்கை இரத்து செய்து உத்தரவிட்டது என நக்கீரன் செய்திகள் தெரிவிக்கின்றன.
Average Rating