உ.பி.யில் இளம்பெண்ணை பலாத்காரம் செய்து உயிரோடு எரித்து கொல்ல முயற்சி!!
Read Time:1 Minute, 23 Second
உ.பி.யில் இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து, தீ வைத்து எரித்த காமக்கொடூரனை போலீசார் தேடி வருகின்றனர்.
பரேலி மாவட்டம் பரித்பூர் பகுதியில் உள்ள கேமுனக்லா கிராமத்தில் வசித்து வரும் 18 வயது இளம்பெண், இன்று தனது வீட்டில் தனியாக இருந்தபோது அவரை பக்கத்து வீட்டில் வசிக்கும் நபர் பலாத்காரம் செய்துள்ளார். பின்னர், விஷயத்தை வெளியில் சொல்லிவிடுவார் என்ற பயத்தில் அந்த பெண்ணை உயிரோடு எரித்துக் கொல்ல முயன்றுள்ளார்.
பலத்த தீக்காயத்துடன் அலறித்துடித்த அவரை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலை மோசமாக இருப்பதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்து தலைமறைவான குற்றவாளியை தேடி வருவதாக போலீஸ் சூப்பிரெண்டு தெரிவித்தார்.
Average Rating