அத்துரலியே ரத்தின தேரரின் கொள்கை யோசனை இன்று வௌியீடு!!
நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை ஒழிப்பது உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தும் வகையில் அத்துரலியே ரத்தின தேரர் கொள்கை யோசனை ஒன்றை முன்வைக்க உள்ளார்.
நாட்டின் எதிர்கால அரசியல் குறித்து தீர்மானிக்கும் முக்கியமான கூட்டம் இன்று (14) கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
இதில் எதிர்க்கட்சிகளின் முக்கிய தலைவர்களைப் போன்றே ஆளும் கட்சியின் முக்கிய அமைச்சர்கள் சிலரும் பங்கேற்க உள்ளனர்.
17ம் திருத்தச் சட்டத்தை அமுல்படுத்தல், அரசியல் அமைப்பினை மாற்றியமைத்து தேர்தல் நடாத்துதல், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ரத்து செய்தல், விருப்பு வாக்கு முறைமையை ரத்து செய்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை ரத்ன தேரர் அரசாங்கத்தின் முன்னிலையில் வைத்துள்ளார்.
கோரிக்கைகளுக்கு சாதகமான பதில்கள் அளிக்கப்படாவிட்டால் ஆளும் கட்சியை விட்டு விலக நேரிடும் என ரதன தேரர் பகிரங்க எச்சரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Average Rating