கொழும்புத் துறைமுகத்தில் வாகன உதிரிபாக களவு: இருவர் கைது!!
Read Time:52 Second
கொழும்புத் துறைமுக வாகன பிரிவில் வாகன உதிரிபாகங்கள் களவாடப்பட்ட சம்பவம் தொடர்பில் சுங்கப் பரிசோதகர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு துறைமுகப் பொலிஸாரால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்களை நீதிமன்றில் ஆஜர் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த கொள்ளைச் சம்பவம் குறித்து துறைமுகப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுப்பதால் தன்னால் கருத்து கூற முடியாது என சுங்கப் பிரிவு ஊடகப் பேச்சாளர் லெஸ்லி காமினி தெரிவித்தார்.
Average Rating