கஹந்தகமவிற்கு எதிரான தடை உத்தரவு நீக்கப்படுமா..?
Read Time:59 Second
அகில இலங்கை சுயதொழில் செய்வோர் சங்கத்தின் தலைவர் கஹந்தகம மற்றும் நிறைவேற்றுக் குழுவுக்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள தடை உத்தரவை அகற்றுவதா இல்லையா என எதிர்வரும் 20ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று (14) அறிவித்துள்ளது.
அகில இலங்கை சுயதொழில் செய்வோர் சங்கத்தின் உறுப்பினர்களிடம் சந்தா சேகரிக்க இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த தடைக்கு எதிராக சங்கத்தின் தலைவர் மற்றும் நிறைவேற்றுக் குழுவால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை பரிசீலித்த போதே கொழும்பு மாவட்ட நீதிமன்றம் மேற்கண்ட அறிவிப்பை விடுத்துள்ளது.
Average Rating