டெல்லி போலீஸ்காரர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் 2 சிறுவர்கள் உள்பட 4 பேர் கைது!!

Read Time:2 Minute, 56 Second

e1c1940d-38a2-444b-b48d-aceaf9eb8d2a_S_secvpfடெல்லியின் விஜய் விகார் பகுதியில் நேற்று அதிகாலை சுமார் 1.30 மணியளவில் அடையாளம் தெரியாத மர்ம ஆசாமிகளால் போலீஸ்காரர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார். மற்றொரு போலீஸ்காரர் காயம் அடைந்தார்.

அப்பகுதியில், நேற்று அதிகாலை போலீசார் ஜக்பீர் சிங், நரேந்தர் ஆகியோர் மோட்டார் சைக்கிளில் வாகன சோதனையில் ஈடுபட்ட போது, ஒருஆட்டோவின் அருகே 4 பேர் நின்று கொண்டு இருந்தனர். அவர்களை நெருங்கிய போலீசார் சந்தேகத்தின் பேரில் அவர்களிடம் விசாரணை செய்தனர்.

அவர்களை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்ல முயன்றபோது ஜக்பீர் சிங்கின் துப்பாக்கியை பறித்த அவர்கள் அந்த துப்பாக்கியால் போலீசார் இருவரையும் சரமாரியாக சுட்டு விட்டு தப்பி ஓடிவிட்டனர்.

இதில் ஜக்பீர் சிங் சம்பவ இடத்திலேயே குண்டு பாய்ந்து பலியானார். முன்னாள் ராணுவ வீரரான இவர் கடந்த 2008-ம் ஆண்டு டெல்லி போலீஸ் பணியில் சேர்ந்தார். மற்றொரு போலீஸ்காரரான நரேந்தர் குண்டு காயங்களுடன் டெல்லி ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.

போலீஸ் நிலையத்தில் இருந்து 200 மீட்டர் தொலைவில் நடைபெற்ற இந்த படுகொலை தொடர்பாக, போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர்.

இந்நிலையில், டெல்லியின் பழைய குற்றவாளிகளின் பட்டியலை சோதித்த போலீசார், ஜக்பீர் சிங் கொலையில் தொடர்புடைய இரண்டு சிறுவர்கள் உள்பட முன்னாள் திருடர்கள் 4 பேரை கைது செய்தனர். பலியான ஜக்பீர் சிங்கிடம் இருந்து பறித்து, அவரையே சுட்டுக் கொல்ல பயன்படுத்தப்பட்ட போலீஸ் துப்பாக்கியையும் பறிமுதல் செய்து குற்றவாளிகளிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தலைநகர் டெல்லியில் இந்த ஆண்டில் இதுவரை 4 போலீசார் சுட்டுக் கொல்லப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மது குடிக்க பணம் தராத தந்தையை இரும்பு கம்பியால் அடித்துக் கொன்ற மகன் கைது!!
Next post டெங்கு நுளம்பு பரவ உதவிய 20 பேருக்கு 1 லட்சம் அபராதம்!!