தஞ்சையில் கல்லூரி மாணவி கடத்தல்?: போலீசில் புகார்!!

Read Time:2 Minute, 15 Second

02305214-3c0e-4f7a-b2a6-d1526fbf4080_S_secvpfதஞ்சை நாலுகால் மண்டபம் பகுதியை சேர்ந்த ராஜசேகரன் மகள் சங்கீதா (வயது 20), இவர் அதேபகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. கம்பியூட்டர் சைன்ஸ் 2–ம் ஆண்டு படித்து வந்தார். இவரும் அதே கல்லூரியில் படிக்கும் சிவா என்பவரும் காதலித்து வந்ததாகவும் அதற்கு ராஜசேகர் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த 10–ந் தேதி ராஜசேகர் திருப்பதிக்கு செல்ல முடிவுசெய்தார். இதனால் மகள் சங்கீதாவை தனது அண்ணன் குணசேகரன் வீட்டில் விட்டு சென்றார். இதையடுத்து கடந்த 12–ந் தேதி தோழியை பார்த்துவிட்டு வருவதாக கூறி சென்ற சங்கீதா மாயமாகி விட்டார். அவரை பல இடங்களில் தேடி பார்த்தும் அவர் கிடைக்காததால் அதிர்ச்சி அடைந்த குணசேகரன், ராஜசேகரனுக்கு தகவல் தெரிவித்தார்.

இதையடுத்து ஊரிலிருந்து பதற்றத்துடன் வீட்டிற்கு வந்த அவர் சங்கீதாவின் தோழிகளை தொடர்பு கொண்டு கேட்டுள்ளார். அப்போது அவர்கள் சங்கீதா இங்கு வரவில்லை என கூறியுள்ளனர். பின்னர் அவர் தனது உறவினர் வீடுகளுக்கு சென்று மகளை தேடியுள்ளனர். ஆனால் அவர் அங்கும் செல்லவில்லை என்பதால் சந்தேகம் அடைந்த ராஜசேகரன் இதுகுறித்து தஞ்சை மேற்கு போலீசில் புகார் செய்தார். புகாரில் தனது மகள் கல்லூரியில் படிக்கும் சிவா என்ற மாணவரை காதலித்து வந்ததாகவும் எனவே அவர் தனது மகளை கடத்தி சென்றிருக்கலாம் என சந்தேகிப்பதாக கூறியுள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான மாணவியை தேடி வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post விடுதிக்குள் புகுந்து பெண்கள் குளிப்பதை செல்போனில் படம் பிடித்த வாலிபர்: பொதுமக்கள் தர்மஅடி!!
Next post காதலை கைவிட மறுத்த ஆட்டோ டிரைவரை வெட்டி கொலை செய்ய முயற்சி!!