விடுதிக்குள் புகுந்து பெண்கள் குளிப்பதை செல்போனில் படம் பிடித்த வாலிபர்: பொதுமக்கள் தர்மஅடி!!
Read Time:1 Minute, 18 Second
கூடுவாஞ்சேரியை அடுத்த காயரம்பேடு, கண்ணன் நகரில் பெண்கள் தங்கும் விடுதி உள்ளது. வெளியூரை சேர்ந்த ஏராளமான பெண்கள் இங்கு தங்கி வேலைக்கு செல்கின்றனர்.
இந்த நிலையில் விடுதிக்குள் சுவர் ஏறிக்குதித்து புகுந்த வாலிபர் குளியலறையில் பெண்கள் குளிப்பதை செல்போனில் படம் பிடித்தார்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெண்கள் கூச்சலிட்டனர். உடனே வாலிபர் அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். அவரை மற்ற பெண்கள் சுற்றி வளைத்து பிடித்தனர்.
இது பற்றி அறிந்ததும் மக்கள் ஏராளமானோர் அங்கு திரண்டனர். அவர்கள் வாலிபருக்கு தர்ம அடி கொடுத்து கூடுவாஞ்சேரி போலீசில் ஒப்படைத்தனர்.
விசாரணையில் அவர் அதே பகுதியை சேர்ந்த வினோத் என்பது தெரிய வந்தது.
அவரை போலீசார் கைது செய்து செங்கல்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் ஜெயிலில் அடைத்தனர்.
Average Rating