டெங்கு நுளம்பு பரவ உதவிய 20 பேருக்கு 1 லட்சம் அபராதம்!!
Read Time:1 Minute, 5 Second
டெங்கு நுளம்பு பரவும் வகையில் தமது சூழலை வைத்திருந்ததாகக் குற்றம் சுமத்தப்பட்ட 20 பேருக்கு தம்பதெனிய சுற்றுலா நீதிமன்றத்தில் குளியாபிட்டி நீதவான் பந்துல குணரத்ன ஒரு லட்சம் ரூபா அபராதம் விதித்துள்ளார்.
தம்பதெனிய பிரதேச வர்த்தகர்கள் ஐவர் உள்ளிட்ட 20 பேருக்கே இவ்வாறு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
தேசிய டெங்கு ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட சோதனையில் இவர்கள் சிக்கியுள்ளனர்.
டெங்கு நுளம்பு பரவாதவாறு சூழலை வைத்துக் கொள்ளுமாறும் அவ்வாறு இல்லாவிடின் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சுகாதார அமைச்சு பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Average Rating