பேராதனை பல்கலைக்கழக நிர்வாகத்திடம் 32 லட்சம் ரூபா மோசடி செய்த கில்லாடி!!

Read Time:1 Minute, 44 Second

19872415741694771156peradeniya-uni-logo2ஜனாதிபதி செயலக விசேட விசாரணை பிரிவு நபர் எனக்கூறி நிதி மோசடியில் ஈடுபட்டவரை கைது செய்ய கண்டி பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

அரச ஊழியர்களுக்கு முச்சக்கர வண்டி வழங்கும் திட்டம் என்ற பெயரில் 32 லட்சம் ரூபா பணத்தை குறித்த நபர் மோசடி செய்துள்ளார்.

பேராதனை பல்கலைக்கழகத்திற்கு தொலைநகல் ஒன்றை அனுப்பிய குறித்த நபர், பல்கலைக்கழக சிரேஸ்ட உத்தியோகத்தர்களுக்கு மாத்திரம் இந்த விசேட கொடுப்பனவு வழங்கப்படும் என கூறியுள்ளார்.

அதனை பெற வேண்டுமாயின் ஒவ்வொருவரும் தலா 25,000 ரூபா செலுத்த வேண்டும் என தொலைநகல் செய்தியில் சந்தேகநபர் குறிப்பிட்டுள்ளார்.

பல்கலைக்கழக நிர்வாக பீட அனுமதியின் பின் சந்தேகநபர் அனுப்பிய வங்கிக் கணக்குக்கு 32 லட்சம் ரூபா வைப்பு செய்யப்பட்டுள்ளது.

எனினும் இதுகுறித்து சந்தேகம் கொண்ட ஒருவர் ஜனாதிபதி செலகத்திற்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தி கேட்டபோது இது ஏமாற்று திட்டம் என தெரியவந்தது.

அதன்படி, குறித்த வங்கிக் கணக்கை முடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் சந்தேகநபரை கைதுசெய்ய கண்டி பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post டெங்கு நுளம்பு பரவ உதவிய 20 பேருக்கு 1 லட்சம் அபராதம்!!
Next post கண்டியில் இபோச பஸ் பள்ளத்தில் விழுந்து ஒருவர் பலி 50 பேர் படுகாயம்!!