அரசாங்கத்தின் வலையில் சிக்க மக்கள் முட்டாள்கள் அல்ல – அக்கில!!
அரசாங்கம் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் வெல்வதற்காக மக்களுடன் விளையாடுகின்றனர். ஆனால் மக்கள் அரசின் வலையில் சிக்க மாட்டார்கள் என ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது.
இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் ஐ.தே.கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அகிலவிராஜ் காரியவசம் இவ்வாறு கூறியிருந்தார்.
அவர் இது குறித்து மேலும் தெரிவித்ததாவது,
மக்கள் முட்டாள்கள் அல்லர். அவர்கள் அரசாங்கம் போடும் தூண்டிலில் சிக்கமாட்டார்கள். இலங்கையர்கள் மாற்றத்தை விரும்புகின்றனர் அடுத்த தேர்தலில் ஆட்சி மாற்றத்துக்கு ஆதரவளிப்பார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்க ஊழியர்களின் ஆதரவை பெறுவதற்காக அவர்களுக்கு சலுகைகளை வழங்கமுயல்வதாகவும், அவர்கள் என்ன கொடுத்தாலும் மக்களுக்கு அது ஏன் என்பது தெரியும். ஜனாதிபதியால் அடுத்த தேர்தலை வெல்ல முடியாது என காரியவம்ச தெரிவித்துள்ளார்.
Average Rating