பாகிஸ்தான் கொடியை எரித்த எட்டுப் பேர் கைது!!
Read Time:1 Minute, 1 Second
கோவை மாவட்ட அகில பாரதிய வித்யார்தி பரிஷத் சார்பில், மாநில செயலாளர் செந்தில், தலைமையில் எட்டு பேர் நேற்று மாலை கோவை கலெக்டர் அலுவலகம் முன் கூடினர்.
காஸ்மீர் மாநிலத்திலுள்ள இந்திய எல்லை பகுதிகளில் அத்துமீறி தாக்குதல் நடத்தும் பாகிஸ்தான் இராணுவத்தை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.
தொடர்ந்து அந்நாட்டு தேசிய கொடியை தீயிட்டு கொளுத்தினர். மேலும், பாகிஸ்தான் பிரதமர் புகைப்படத்தை தரையில் போட்டு மிதித்து, ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தகவலறிந்து, நிகழ்விடத்துக்கு விரைந்த பந்தையச்சாலை பொலிஸார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட எட்டு பேரை கைது செய்தனர்.
Average Rating