இனப்பெருக்கத்தில் விபரீதம் – புலி பரிதாபமாக பலி!!
Read Time:1 Minute, 21 Second
கர்நாடக மாநிலம், மங்களூர் நகரின் அருகில் இருக்கும் வமஞ்சூர் பகுதியில் பிலிகுலா வனவிலங்கு சரணாலயம் அமைந்துள்ளது.
இந்த சரணாலயத்தில் இருக்கும் பண்ட்டி(5) என்ற பெண் புலியை இனப்பெருக்கத்துக்காக ஒரு கூண்டுக்குள் அடைத்த சரணாலய அதிகாரிகள், கடந்த திங்கட்கிழமை காலை அதே கூண்டுக்குள் குமார்(7) என்ற ஆண் புலியையும் உலவ விட்டனர்.
பண்ட்டியை கண்ட குமார் ஆவேசமாக அதன்மீது எகிறிப்பாய்ந்தது. பயந்து ஒதுங்கிச் சென்ற பண்ட்டியை கைகளால் அடித்தும், கடித்தும் குமார் கோபத்துடன் தாக்கியது. இதில் படுகாயமடைந்து கீழே விழுந்துக் கிடந்த பண்ட்டியை கூண்டில் இருந்து வெளியே தூக்கிய கால்நடை மருத்துவர்கள் அவசர சிகிச்சை அளித்தனர்.
எனினும், கழுத்தில் கடிபட்ட காயத்தில் இருந்து ஏராளமான ரத்தம் வெளியேறியதால் சிகிச்சை பலனின்றி பண்ட்டி நேற்று உயிரிழந்தது.
Average Rating