காட்பாடியில் வாலிபருக்கு பாட்டில் குத்து!!
Read Time:46 Second
காட்பாடி அடுத்த பெரியபுதூர் காலனியை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 20) கூலி தொழிலாளி. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பிரகாஷ் (31) என்பவருக்கும் முன்விரோதம் இருந்தது.
இது தொடர்பாக நேற்று இரவு இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது பிரகாஷ் பீர் பாட்டிலால் ராஜேஷ் வயிற்றில் குத்தினார். இதில் படுகாயமடைந்த அவரை வேலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். காட்பாடி போலீசார் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து பிரகாசை கைது செய்தனர்.
Average Rating