ஒருவர் பலி, 60 வீடுகள் சேதம் – இன்றும் மழை!!
Read Time:1 Minute, 1 Second
கேகாலை மாவட்டத்தில் எட்டியாந்தோட்டை பிரதேசத்தை ஊடறுத்து வீசிய கடும் காற்றினால் சில வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.
சுமார் 60 வீடுகள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிபிலி தெரிவித்துள்ளார்.
இதில் ஒரு வீடு முற்றாக சேதமடைந்துள்ளது.
மேலும் காற்றினால் மரம் முறிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் பிரதீப் கொடிபிலி சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நிலையில் இன்றும் நாட்டின் பல பகுதிகளில் மழை பெய்யக் கூடும் என வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
Average Rating