கடவுளின் பெயரால் தேவாலயத்திற்குள் சிறுமிகளை வல்லுறவு செய்த அருட்தந்தை கைது!!
சிறுமிகள் இருவரை தேவாலயத்திற்குள் வைத்து பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய அருட்தந்தை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிலாபம் – பம்பல பிரதேச தேவாலயத்தில் கடமையாற்றும் மாதம்பை – இரட்டிக்குளத்தைச் சேர்ந்த 31 வயதான அருட்தந்தையே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
தற்போது 19 வயதுடைய சிறுமியை குறித்த அருட்தந்தை நான்கு வருடங்களுக்கு முன்னர் இருந்தே பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி வந்துள்ளார். மேலும் தற்போது 15 வயதுடைய சிறுமி ஒருவரை இரண்டு வருடங்களுக்கு முன்பிருந்தே வல்லுறவு செய்து வந்துள்ளார்.
கடவுளுக்காக கன்னியாஸ்திரி நிலையை தியாகம் செய்ய வேண்டும் எனக் கோரியே குறித்த அருட்தந்தை சிறுமிகள் இருவரையும் வல்லுறவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமக்கு நடந்த கொடுமைகளை சிறுமிகள் பெற்றோரிடம் தெரிவித்த பின்னர் பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டை அடுத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் சுகயீனமுற்றிருப்பதால் அவர் பொலிஸ் காவலில் சிலாபம் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.
வல்லுறவு சம்பவம் வெளிச்சத்திற்கு வந்ததால் சந்தேகநபர் விஷம் அருந்தியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
சிலாபம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Average Rating