இலவச கருமுட்டை – ஃபேஸ்புக், ஆப்பிள் நிறுவனங்கள் உதவி!!
பெண்களுக்கு உண்டாகும் கருமுட்டையை உறைபனி செய்து, தேவைப்பட்டபோது குழந்திஅபெற்றுக்கொள்ளும் வசதி தற்போது வெளிநாடுகளில் அதிகரித்து வருகிறது. ஆனால்இந்த கருமுட்டை உறைபனி முறைக்கு அதிக செலவாகும் என்பதால் பல பெண்கள் இந்தமுறையினை பின்பற்றாமல் இருந்தனர்.
ஆனால் தற்போது ஆப்பிள் மற்றும் ஃபேஸ்புக்போன்ற நிறுவனங்கள் தங்களுடைய பெண் தொழிலாளர்கள், கருமுட்டை உறைபனி செய்யவிரும்பினால் அதை இலவசமாக செய்து தர முன்வந்துள்ளது. இதன் மூலம் அவர்கள்மனதை ஒருமுகப்படுத்தி வேலை செய்வார்கள் என அந்த நிறுவனங்கள் எண்ணுகிறது.
திருமணமான இளம்பெண்கள் தங்களுடைய கருமுட்டையை உறைபனி செய்து தேவைப்பட்டபோதுஉறைபனி செய்த கருமுட்டையின் உதவியால் குழந்தை பெற்றுக்கொள்ளலாம். இதனால்திருமணம் ஆனவுடன் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற தேவை ஏற்படுவதில்லை.அதே நேரம் மலடி என்ற அவப்பெயரும் உண்டாகாது. ஆனால் இதற்கு சுமார் 10,000 டாலர்கள் வரை செலவாகும். அதுமட்டுமின்றி இந்த கருமுட்டை உறைபனியை பாதுகாக்கஒவ்வொரு மாதமும் 500 டாலர் செலவாகும்.
இதனால் பணக்காரர்கள் மட்டுமே கருமுட்டை உறைபனி செய்து தேவைப்பட்ட நேரம்குழந்தை பெற்று வந்தனர். தற்போது ஆப்பிள் மற்றும் ஃபேஸ்புக் நிறுவனங்கள்தங்கள் நிறுவனங்களின் பகுதி நேர அல்லது முழு நேர பெண் ஊழியர்களுக்குகருமுட்டை உறைபனி முறைக்கு உண்டாகும் செலவை ஏற்றுக்கொள்ள முன்வந்துள்ளது.இதனால் பெண் ஊழியர்கள் மகிழ்ச்சிஅடைந்துள்ளன.
மேலும் இந்த நிறுவனங்கள்விந்து நன்கொடையாளர்களுக்கும் மற்றும் கருவுறாமை சிகிச்சைக்கும், $20,000 வரை செலவினை கொடுத்து உதவி செய்ய உள்ளது.
Average Rating