சிந்தாமணியில் திருமணமான பெண் மாயம்: கணவர் புகார்!!
Read Time:1 Minute, 11 Second
மனைவி மாயமானதாக போலீசில் புகார் கொடுத்த கணவர், வடமாநில வாலிபர் மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
மதுரை சிந்தாமணியை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மனைவி மகாலட்சுமி (வயது 28). இவர்களது வீட்டின் அருகே வசிப்பவர் முகேஷ், பீகாரை சேர்ந்தவர்.
இவருக்கும், மகாலட்சுமிக்கும் தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனை ராமசாமி பலமுறை கண்டித்துள்ளார்.
இந்த நிலையில் மகாலட்சுமி சம்பவத்தன்று திடீரென மாயமானார். அதே நேரத்தில் வடமாநில வாலிபர் முகேசையும் காணவில்லை.
இதுகுறித்து அவனியாபுரம் போலீசில் ராமசாமி புகார் கொடுத்துள்ளார். அதில், மகாலட்சுமியை முகேஷ் கடத்தி சென்று இருக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Average Rating