வாடிப்பட்டியில் பொது இடத்தில் புகைப்பிடித்தவர்களிடம் ரூ.2300 அபராதம் வசூல்!!
வாடிப்பட்டி யூனியன் கச்சைகட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பாக வாடிப்பட்டி பகுதியில் பஸ் நிலையம், தாதம்பட்டி மந்தை, ஆரோக்கிய அன்னை திருத்தலம், அரசு மருத்துவமனை, பேரூராட்சி அலுவலகம், யூனியன் அலுவலகம், நீதிமன்றம் உள்பட பொது இடங்களில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் முத்துவேல் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் கண்ணன், சக்திவேல், கிருஷ்ணன், ராமகிருஷ்ணன், ராதாகிருஷ்ணன், சுந்தரராஜ், போலீஸ் ஏட்டு விஜய் ஆகியோர் தீவிர ரோந்து செய்தனர்.
அப்போது அந்த பகுதிகளில் புகை பிடித்த 19 நபர்களிடம் தலா ரூ.100 வீதம், 2 கடைக்காரர்களுக்கு ரூ.200 வீதம் மொத்தம் ரூ.2300 அபராத தொகை விதித்து அதை பெற்றுக்கொண்டு ரசீது கொடுத்தனர்.
மேலும் பொதுமக்களிடம் இனிமேல் பொது இடங்களில் புகை பிடிக்க கூடாது என்றும் கடைகாரர்களிடம் பீடி, சிகரெட், பான்பராக், புகையிலை விற்பனை செய்யக்கூடாது என்று எச்சரித்தனர்.
Average Rating