முக்கிய கலந்துரையாடலுக்காக கோட்டாபய ராஜபக்ஷ விரைவில் இந்தியா பயணம்!!
Read Time:1 Minute, 14 Second
பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ அடுத்த வாரமளவில் இந்தியாவின் தலைநகர் புதுடில்லிக்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜிட் டோவாலுடன் உயர்மட்ட சந்திப்பு ஒன்றை கோட்டாபய ராஜபக்ஷ நடத்தவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சந்திப்பின் நிகழ்ச்சி நிரல் இன்னும் வெளிவராத நிலையில் கோட்டாபயவின் விஜயம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
நரேந்திர மோடி அரசாங்கத்தின் தேசிய பாதுகாப்பு ஆலோசகரை இலங்கை பாதுகாப்புச் செயலாளர் சந்திக்கும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.
எனினும் இந்த சந்திப்பு வழமைப்போன்ற ஒன்றாகவே அமையும் என இராணுவ ஊடகப் பேச்சாளர் ருவான் வணிகசூரிய தெரிவித்துள்ளார்.
Average Rating