போலீஸ்காரர் மனைவியிடம் நகை பறிப்பு!!
Read Time:39 Second
புதுவண்ணாரப் பேட்டை போலீஸ் குடியிருப்பில் வசித்து வருபவர் கோபால். ஆர்.கே.நகர் போலீஸ் நிலையத்தில் தலைமை காவலராக உள்ளார். இவரது மனைவி உமாராணி.
நேற்று இரவு புதுவண்ணாரப் பேட்டை கிராஸ் ரோட்டில் தனியாக நடந்து வந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து வந்த 2 வாலிபர்கள் உமாராணி கழுத்தில் கிடந்த 2½ பவுன் செயினை பறித்து தப்பி சென்று விட்டனர்.
Average Rating