24 இலங்கையர்களை கைதுசெய்தது பங்களாதேஷ்!!
Read Time:1 Minute, 0 Second
பங்களாதேஷ் கடற்பரப்பில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இலங்கை மீனவர்கள் 24 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இன்று (18) அதிகாலை அந்த நாட்டு கடற்பாதுகாப்பு அதிகாரிகளால் இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக, கடற்தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும் குறித்த மீனவர்கள் பயணித்த இரு படகுகளும் கடற் பாதுகாப்பு அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.
மாத்தறை, கந்தர மற்றும் வெலிகம ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த மீனவர்களே இவ்வாறு கைதாகியுள்ளனர்.
இவர்களை விடுதலை செய்யத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக கடற்தொழில் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
Average Rating