மீனவர்கள் விவகாரம் – சாமி மீது மற்றுமொரு வழக்கு!!

Read Time:2 Minute, 11 Second

1461570780Untitled-1தமிழக மீனவர்களின் படகுகள் சிறைபிடிப்பு விவகாரத்தில் பா.ஜனதாவை சேர்ந்த சுப்பிரமணியசாமி மீது மீனவ அமைப்புகள் சார்பில் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

இந்தநிலையில் நெல்லை நீதிமன்றத்திலும் சுப்பிரமணியசாமி மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இது குறித்து அ.தி.மு.க.வை சேர்ந்த மாரியப்பன், ராமலிங்கம், தமிழ் தேசிய பேரவையை சேர்ந்த வெங்கடாஜலபதி, மணிமாறன், செங்கொடி எழுச்சி பேரவை செய்யதலி, அசன் ஆகியோர் கூட்டாக சேர்ந்து நெல்லையில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தனர்.

அப்போது அவர்கள் கூறியதாவது:–

பா.ஜனதா கட்சியை சேர்ந்த சுப்பிரமணிய சுவாமி பேசும் போது, தமிழக மீனவர்களின் படகுகளை இலங்கை இராணுவம் நான் சொல்லிதான் பறிமுதல் செய்துள்ளனர் என்று கூறியுள்ளார்.

இதன் மூலம் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதற்கு சுப்பிரமணிய சுவாமிதான் காரணம் என உறுதியாகிவிட்டது.

எனவே அவர் மீது 294 பி, 500, 124ஏ ஆகிய சட்டப்பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அவருக்கு ரூ.100 கோடி அபராதம் விதிக்க வேண்டும் என்று நெல்லை ஜே.எம்.1–வது நீதிமன்றத்தில் நாங்கள் 6 பேரும் கூட்டாக சேர்ந்து வழக்கு தொடர்ந்துள்ளோம்.

இதற்கான மனுவை வக்கீல் கந்தையா நேற்று நெல்லை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். அந்த மனு மீதான விசாரணை வருகிற 24–ம் திகதி நடைபெறும் என நீதிபதி கூறியுள்ளார், இவ்வாறு அவர்கள் கூறினர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இசை நிகழ்ச்சியில் கூரை இடிந்து விழுந்து 16 பேர் பலி!!
Next post மதுரையில் வீட்டில் வைத்து விபசாரம்: பெண் கைது – 3 அழகிகள் மீட்பு!!